- பாவ சஞ்சலத்தை நீக்க
 பிராண சிநேகிதனுண்டே
 பாவ பாரம் தீர்ந்து போக
 மீட்பர் பாதம் தஞ்சமே
 லோக துக்கம் துன்பத்தாலே
 நெஞ்சம் நொந்து சோருங்கால்
 துன்பம் இன்பமாக மாறும்
 ஊக்கமான ஜெபத்தால்
- கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
 இயேசுவண்டை சேருவோம்
 மோச நாசம் நேரிட்டாலும்
 செப் தூபம் காட்டுவோம்
 நீக்குவாரே நெஞ்சின் நோவை
 பெலவீனம் தாங்குவார்
 நீக்குவாரே மனச் சோர்வை
 தீய குணம் மாற்றுவார்
- பெலவீனமான போதும்
 கிருபாசனமுண்டே
 இன சனம் சாகும்போதும்
 புகலிடம் இதுவே
 ஒப்பில்லாத பிராணநேசா!
 உம்மை நம்பி நேசிப்போம்
 அளவற்ற அருள் நாதா!
 உம்மை நோக்கி கெஞ்சுவோம்
Genre: Hymn
Language: Tamil
Book: New Song 1 Page 36
Translations: What a Friend we have in Jesus; යේසුස් මෙන් මිතුරෙක් ඇත් ද
Download slides: PDF